பிரித்தானிய மகாராணியாரின் இறப்பு குறித்த இரகசிய திட்டம் கசிந்தது
நம் நாடுகளில், நாட்டின் தலைவர்கள் இறந்துபோனால் என்ன ஆகும் என்பது குறித்தெல்லாம் நாம் பேசமாட்டோம்.
ஆனால், மேலை நாடுகளில், குறிப்பாக ராஜ குடும்பத்தினர் ஆளும் நாடுகளில், அவர்கள் உயிருடன் இருக்கும்போதே, அவர்கள் இறந்தால் என்னென்ன செய்யப்படும் என்பது குறித்த திட்டங்கள் இடப்படுகின்றன.
அவ்வகையில், பிரித்தானிய மகாராணியார் இறந்தால் என்னென்ன செய்யப்படும் என்பது ஒரு குறித்த ஒரு மிக முக்கிய இரகசிய தகவல் தற்போது கசிந்துள்ளது.
'Operation London Bridge' என்று அழைக்கப்படும் அந்த திட்டம், மகாராணியார் இறக்கும் நாள் 'D-Day' என அழைக்கப்படும் என்கிறது.
மகாராணியார் இறந்ததும், அது குறித்த தகவல் உடனடியாக பிரித்தானிய பிரதமருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மகாராணியாரின் இறப்பு தெரிவிக்கப்படும். அவர் இறந்து 10 நிமிடங்களுக்குள் அனைத்து கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மகாராணியாரின் இணையதளம் கருப்பாக மாறும். பிரதமர் தன் இல்லம் முன்பு மகாராணியாரின் மரணம் குறித்து உரையாற்றுவார். மாலை 6 மணி செய்தியில் மன்னர் சார்லஸ் உரையாற்றுவார்.
நாள் ஒன்று: இளவரசர் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்படுவார்.
நாள் இரண்டு: மகாராணியாரின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுவரப்படும்.
நாள் மூன்று: மன்னர் சார்லஸ் பிரித்தானிய பயணம் மேற்கொள்வார்.
நாள் ஐந்து: மகாராணியாரின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகைக்கு கொண்டுவரப்படும்.
நாள் ஆறு முதல் ஒன்பது: மகாராணியாரின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
நாள் பத்து: வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் மகாராணியாரின் இறுத்திச்சடங்கு ஆராதனையும், விண்ட்சரில் அவரது உடல் அடக்கமும் நடைபெறும்.
இப்படி ஒரு பக்கம் இரகசிய தகவலான மகாராணியார் மரணம் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், மகாராணியாரின் மரணம் குறித்த மிக இரகசிய தகவல் வெளியானதைத் தொடர்ந்து அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், அரண்மனை அலுவலர்கள் இந்த செய்தி கேட்டு வருத்தமுற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.