கனத்த இதயத்துடன் பதவி விலகுகிறேன் - டிரம்ப் படுகொலை முயற்சியை அடுத்து Secret Service இயக்குநர் ராஜினாமா
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டினைத் தொடர்ந்து, உளவு பிரிவின் இயக்குனர் ராஜினாமா செய்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு
பென்சில்வேனியாவில் கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற தமது பிரச்சார கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அவர் காயத்துடன் தப்பிய நிலையில், அவரை நோக்கி சுட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உலகளவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுப் பிரிவின் கவனக்குறைவே இதற்கு காரணம் என புகார்கள் எழுந்தன.
ராஜினாமா
உளவு பிரிவின் இயக்குனர் பதவி விலகுவதற்கான அழைப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து கிம்பர்லி சீத்தல் பல விசாரணைகளை எதிர்கொண்டார்.
இந்த நிலையில் உளவு பிரிவின் (Secret Service) இயக்குனரான கிம்பர்லி சீத்தல் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்வது குறித்து அவர், ''பாதுகாப்பு குறைபாட்டிற்கு நான் முழுப்பொறுப்பேற்கிறேன். சமீபத்திய நிகழ்வுகளின் வெளிச்சத்தில், கனத்த இதயத்துடன் உங்கள் இயக்குனர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன்'' என மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |