11,000 பேரின் கொலைக்கு உடந்தையாக இருந்த நாஸி கொலை முகாம் செயலர் தலைமறைவு: மக்கள் கடும் கோபம்
ஜேர்மனியில், 11,000 பேரின் கொக்கு உடந்தையாக இருந்ததற்காக விசாரணைக்குட்பட இருந்த பெண் ஒருவர் தலைமறைவானார்.
Irmgard Furchner (96) என்ற அந்த பெண், நாஸி கொலை முகாம் ஒன்றில் செயலராக பணிபுரிந்தவராவார்.
நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டிய அவர், அதிகாலை மணி 6.00க்கும் 7.20க்கும் இடையில், தான் தங்கியிருந்த முதியோர் இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், நீதிபதி அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்க, பொலிசார் அவரைத் தேடும் முயற்சியில் இறங்கினர். வியாழனன்று Hamburg என்ற இடத்தில் அவர் பொலிசாரிடம் சிக்கினார்.
அடுத்த முறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும் வரை அவர் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், அவரை தப்பவிட்டதற்காக, சித்திரவதை முகாம்களில் இருந்து உயிர் பிழைத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.