உங்க தலைவர் அனுப்பிய இராணுவம் என் அக்கா தங்கைகளை வன்புணர்வு செய்து கொன்றதே.. ஜோதிமணி விமர்சனம் தொடர்பில் பொங்கிய சீமான்
ராகவன் விவகாரம் குறித்து நான் கூறிய கருத்துக்காக கொந்தளித்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, அவர் தலைவர் அனுப்பி இராணுவம் பல்லாயிரக்கணக்கான என் அக்கா தங்கைகளை வன்புணர்வு செய்து கொன்றத குறித்து ஏன் வாய்திற்க்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொங்கியுள்ளார்.
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம், தமிழ்த்தேசியப் போராளி ஐயா தமிழரசன் மற்றும் கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு இன்று சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடந்தது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், கரூர் எம்.பி ஜோதிமணி விமர்சனங்கள் தொடர்பில் பதிலளித்தார்.
சீமான் கூறியதாவது, என் மேல் ஏற்கனவே இருப்பது புகார் தான். இச்சமூகம் வளர்ந்து வரும் ஒருவனை வீழ்த்துவதற்கு கடைசியாக எடுக்கும் கருவி இது.
காங்கிரஸ் கட்சியில் இத்தனை பேர் இருக்கும் போது ஜோதிமணி இதைப்பற்றி வலுவ பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது.
ராகவன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது, எனவே வழக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறு உங்கள் கூட்டணி முதல்வரிடம் பேசியிருக்க வேண்டும்.
என்னை திட்டி இத்தனை பக்கத்திற்கு கடிதம் எழுதியது போல் ராகவனை திட்டி எழுதவில்லையே ஏன்?
அவர்களுக்கு ராகவன் அல்ல பிரச்சினை, அந்த காணொளி அல்ல பிரச்சினை.. அவர்களுக்கு சீமான் தான் பிரச்சினை.
பாலியல் வன்புணர்ச்சி, வன்கொடுமை, பாலியல் சுரண்டல் இதையெல்லாம் பேசுகின்ற தங்கை ஜோதிமணி உட்பட பெருந்தகைகள், உங்க கட்சித்தலைவர் அனுப்பிய இராணுவம், பல்லாயிரக்கணக்கான என் அக்கா தங்கைகளை வன்புணர்வு செய்து கொன்றது.
நீங்கள் காசு, ஆயுதங்கள் மற்றும் பயிற்சி கொடுத்த சிங்கள இராணுவம் கதற கதற என் தங்கைகளை அக்காக்களை வன்புணர்வு செய்து கொன்றது.
அதையெல்லாம் நீங்கள் ஒரு வார்த்தை கண்டிக்கவில்லை, அதைப்பற்றியெல்லாம் ஒரு வார்த்தை பேசவில்லையே ஏன் என சீமான் கொந்தளித்துள்ளார்.
இறுதியாக பேசி சீமான், வேர்க்காமல் விளையாட முடியாது, விமர்சிக்காமல் வளர முடியாது, நல்ல விமர்சியுங்கள் என கூறினார்.