கஞ்சா போதை பொருள் தான்! டாஸ்மாக் மதுபானம் தீர்த்தமா? சீமான் அதிரடி கேள்வி
தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தமிழ்நாட்டு மாடல் என பெயர் வைக்கலாம் என கூறும் சீமான்.
கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என வலியுறுத்தல்.
டாஸ்மாக் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும்.
கஞ்சா, குட்கா, ஹெராயின் போன்றவை போதை பொருட்கள் என முருகன் ஆணையாக ஒத்துக் கொள்கிறேன்;
ஆனால் டாஸ்மாக் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா? என கேள்வியெழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்பது பெயர் அளவிலேயே உள்ளது; கோயில்களில் தமிழ் வழிபாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.