மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்! செய்தியாளர்களிடம் கோபப்பட்ட சீமான் வீடியோ
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசினார்.
சீமான் பேசுகையில், குடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு என்பது கொண்டுவரப்பட்டது. சமூக நீதி என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், எது உண்மையான சமூக நீதி... சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான நீதி வழங்குவதே சரியான சமூக நீதியாக இருக்கும்.
சமூக நீதியை பேசிக்கொண்டிருக்கும் தமிழகத்தில் ஏன் குடிவாரி கணக்கெடுப்பு எடுக்க வில்லை. ஆனால் சமூக நீதி பற்றி பேசாத பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் குடிவாரி கணக்கெடுப்பு எடுக்கிறார். இவ்வாறு இடஒதுக்கீடு குறித்து பேசிக்கொண்டிருந்த சீமானிடம் நிருபர் ஒருவர், 'பெரியார் சாதியில் ஏற்றத்தாழ்வு இருக்கூடாது என்று கூறியிருக்கிறாரே அதுபற்றி கேள்வி எழுப்பினார்.
பத்திரிகையாளரை அடிச்சு மண்டைய ஒடச்சிருவேனு சொல்லுதான். ஒரு கேள்வியை எதிர்கொள்ள துப்பில்ல. pic.twitter.com/CHaAk28Qgl
— கொக்கி_Politics_3.0 (@PoliticsKokki) August 13, 2022
அதற்கு பதலளித்த சீமான், இப்போதும் சாதியில் ஏற்றத்தாழ்வு இருக்கிறதா? இல்லையா? என நிருபர்களிடம் பதில் கூறுமாறு பேசினார். ஒரு கட்டத்தில் சீமான், நீ பிசி எம்பிசிக்கு வா.. நான் இங்கே தான் இருப்பேன்... நான் முற்படுத்தப்பட்ட வகுப்பா தான் இருப்பேன்.. என கூறி முடிப்பதற்குள் நிருபர், அத பத்தி நீங்க பேசவேயில்லைய சார் என கூறுகிறார்.
அதற்கு ஆவேசப்பட்ட சீமான்.. காதில் பஞ்சை வைத்து படுத்து கிடந்துவிட்டு என்னை பேசவில்லை..கீசவில்லை... என்கிறாய்.. கேட்கவில்லை என்றால் கேட்கவில்லை என்று கூறு... என்றார். ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த சீமான் 'மண்டையை உடைத்து விடுவேன்டா ராஸ்கல்' என பேசினார்.