திமுக அரசின் நிதி நிலை அறிக்கை வெற்று அறிவிப்புகளை கொண்ட ஒரு விளம்பர அறிக்கை!
சீமான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் நிதிநிலை அறிக்கை, வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட ஒரு விளம்பர அறிக்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறிதது சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் நிதிநிலை அறிக்கையானது யாதொரு தொலைநோக்குத்திட்டமுமின்றி வெற்று விளம்பர அறிக்கையாக மட்டுமே இருப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது.
தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிடாமல் ஆளும் திமுக அரசு நழுவி வருவது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
மாநிலத்திற்குள் உள்ளூர் முதலீடுகளை ஈர்க்க எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்காத இந்த நிதிநிலை அறிக்கை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தையோ அல்லது வாழ்வாதாரத்தையோ மேம்படுத்த எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்பதே உண்மை நிலையாகும்.
திமுக அரசின் நிதி நிலை அறிக்கை வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட ஒரு விளம்பர அறிக்கை!https://t.co/zcBBgh0lBM pic.twitter.com/FJ4CMrleJL
— சீமான் (@SeemanOfficial) March 19, 2022
ஒட்டுமொத்தத்தில், திமுக அரசின் இந்நிதிநிலை அறிக்கையினை, மக்களுக்கு நலன் பயக்காத வகையில் வழமையாக வரும் வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட விளம்பர அறிக்கையென மதிப்பிடுகிறேன் என சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.