சொந்த நாட்டு மக்களையே கொல்வதா? இது நாடா? சுடுகாடா? நாகாலந்து சம்பவத்துக்கு சீமான் கண்டனம்
இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என தவறாக கருதி பாதுகாப்பு படையினர் சொந்த நாட்டு மக்களையே கொன்ற சம்பவத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகலாந்து மாநிலத்தில் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் பொதுமக்களை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறுத்து பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் காட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்திய இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.
இது மக்களுக்கான நாடா? அல்லது சுடுகாடா? என உள்ளச்சீற்றம் ஏற்படுகிறது. சொந்த மக்களையே காக்கை, குருவியை சுடுவது போல கொலை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
சீமானின் முழு அறிக்கை கீழே,
Nagaland Civilian Killings: Indian Armed Forces Must be Withdrawn!
— சீமான் (@SeemanOfficial) December 6, 2021
It is shocking that 19 indigenous people have been shot dead bythe Indian security forces.
I vehemently oppose such state-sponsored attacks instigated by the military against its people.https://t.co/p20kWtBDfz pic.twitter.com/BcHgwkglve