அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்! பெருந்துயரமடைந்த சீமான்
அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அவைத் தலைவரும், அதிமுகவின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஜூலை 5ம் திகதி சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
அவைத்தலைவர் மதுசூதனனின் மறைவையொட்டி, 5.08.2021 முதல் 7.08.2021 வரை மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.
அதேபோல், தமிழகம் மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும், கழகக் கொடி, அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதையும், அனைத்துக் கழக நிகழ்ச்சிகளும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மதுசூதனன் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான ஐயா மதுசூதனன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான ஐயா மதுசூதனன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்! pic.twitter.com/vUGB6bRj4y
— சீமான் (@SeemanOfficial) August 5, 2021
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என இரங்கல் தெரிவித்துள்ளார்.