சீமான் வகுத்த அந்த வியூகம்! தென் மாவட்டங்களில் தினகரனை பின்னுக்கு தள்ளுமா நாம் தமிழர்?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வகுத்த சில வியூகங்கள் இப்போது அவருக்கு வாக்குகளாக வந்து விழுந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற இரு மாபெரும் கட்சிகளே மாறி..மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. அதிமுகவில் ஜெயலலிதாவும், திமுகவில் கருணாநிதியும் இல்லாததால், இம்முமுறை இரண்டு மாபெரும் தலைவர்கள் இல்லாமல் இந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இந்த வெற்றிடத்தை மேற்கொள் காட்டி பல கட்சிகள் இந்த முறை களத்தில் இறங்கின. ஆனால் சீமானோ தனி ஒருவனாகவே இந்த தேர்தலை எதிர் கொண்டார். ஆனால், அவர் இரண்டு வியூகங்களை இந்த தேர்தலில் பயன்படுத்தியுள்ளார். .
ஒன்று ஆதித் தமிழர் என்ற பெயரில் தலித் வேட்பாளர்களை சீமான் களம் இறக்கியது. மற்றொன்று ஜெயலலிதா பிறந்த நாள் அன்று சசிகலாவை நேரில் சென்று சந்தித்தது.
அது தான் இப்போது சீமானுக்கு வாக்குகளாக மாறியுள்ளது. வெளியாகியுள்ள EXITPOLL-ல் தென் மண்டலங்களில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு சசிகலா சந்திப்பும், ஸ்டாலினை நேரடியாக எதிர்க்கும் சீமானின் தைரியமும் தான் காரணமாம்.
இதன் காரணமாகவே தென் மண்டலங்களில் ஏராளமான ஓட்டுகள் நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளதாம், தென் மாவட்டங்களில் அதிமுக ஓட்டை தினகரன்தான் பிரிக்க போகிறார் என்ற கூறப்படுவது உண்மை என்றாலும், ஒரு சில இடங்களில் தினகரன் கட்சியை முந்தும் அளவிற்கு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு விழுந்திருக்கிறதாம்.