ஒரே சுடுகாடு கொண்டு வாங்க... எல்லாரையும் புதைச்சிடலாம்... சீமான் ஆவேசம்
ஒரே நாடு வருது ஒரே மதம் வருது என கூறுகிறவர்கள் ஒரே சுடுகாட்டையும் கொண்டு வாருங்கள் என சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் திகதி நடக்கிறது. இதற்கான வாக்கு சேகரிப்பில் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கு என்று தமிழக மாநிலத்திற்கு எவ்வளவு நீதி ஒதுக்குகிறீர்கள்.
தமிழக பாராளுமன்ற தேர்தலுக்கு, கர்நாடாக சட்டசபை தேர்தலுக்கு எவ்வளவு நிதி ஓதுக்கிறீர்களோ அதே நிதியைத்தான் ஒதுக்க போறீங்க.
அப்படி இருக்க ஒரே தேர்தல் நடத்தினால் தேர்தல் செலவு குறைந்திடுமா?. எப்படி குறையும்? ஒரே நாடு வருது... ஒரே மதம் வருது... ஒரே மொழி வருது... ஒரே ரேசன் கார்டு... இதெல்லாம் வருதுல... ஒரே குளம் எல்லோரும் குளிக்கலாம், ஒரே சுடுகாடு எல்லோரையும் புதைக்கலாம்... கொண்டு வாருங்கள்.
அன்றைக்கு சொல்லுங்கள் தேசப்பற்றைப் பற்றி. நான் என் தேசம் பற்றி கொண்டாடுகிறேன். முடியுமா? என கூறியுள்ளார்.