சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்! டிஜிபி-யிடம் காங்கிரஸ் புகார்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் கைதுசெய்ய வேண்டும் என டிஜிபி-யிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கரூர் பாராளமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த கரூர் எம்பி ஜோதிமணி, தமிழகத்தில் தொடர்ந்து வன்முறையையும், பயங்கரவாதத்தையும் தூண்டும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும், அவரது கட்சியில் அவரால் ஏவிவிடப்பட்டவர்களும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் மனித வெடிகுண்டு படுகொலை நடக்கும் என்பது போலவும், அப்படி மனித வெடிகுண்டு படுகொலை நடத்துவதற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது போலவும் துரைமுருகன் சீமான் முன்னிலையில் பேசியிருக்கிறார்.
சீமானுடைய ஒப்புதலோடு தான் இந்த பேச்சு நடந்திருக்கும், அவருடைய தூண்டுதலின் பேரில் தான் இந்த பேச்சு நடத்திருக்கும் என நாங்கள் நினைக்கிறோம்.
தனால், சீமானை சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டம் UAPA கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கோரி டிஜிபி-யிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்கள் புகார் அளித்துள்ளோம்.
சீமானின் அரசியல் பயங்கரவாதத்தையும் படுகொலைகளையும் ஆதரிப்பதாகவும் முன்நிறுத்துவதாகவும் இருக்கிறது என ஜோதிமணி கூறினார்.
தமிழ்நாட்டினுடைய பாதுகாப்பையும் அமைதியையும் முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ் கைதுசெய்ய வேண்டும். - கரூர் பாராளமன்ற உறுப்பினர் திருமிகு @jothims pic.twitter.com/MJt15sbT7k
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) October 12, 2021
கன்னியாகுமரியில் மலைகளை உடைத்து கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகவும், தமிழக அரசு இயற்கை வளங்களைக் காக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 10ம் திகதி நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் 25ஆம் திகதிவரை சாட்டை துரைமுருகனைச் சிறையில் அடைக்க பத்மநாபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.