ஈழத் தமிழர்களின் வலி! சீமான் உட்பட பலரின் பாராட்டுகளை பெற்று வரும் ஆறாம் நிலம்
இலங்கையில் போர் சூழலுக்கு பின் ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலையை அப்படியே காட்டப்பட்டிருக்கும் படம் தான் ஆறாம் நிலம்.
இப்படம் ஐபிசி தமிழ் யூ டியூப் தளத்தில், சமீபத்தில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈழ நிலத்தின் வலியை மொழியெடுத்து திரையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆறாம் நிலம் திரைக்காவியம் பெரும் வெற்றியடைய வேண்டுமென வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ்ச்சொந்தங்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாட வேண்டுமென தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.