மு.க.ஸ்டாலினிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்த சீமான்! என்னென்ன?
தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
இன்று கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் உட்பட 34 அமைச்சர் பதவியேற்றனர்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது மாநிலம் முழுவதும் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முதல்வரான ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.
அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையினரின் பதவியேற்கும் விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்மொழியின் மீட்சி, தமிழர்களின் நலன், தமிழினத்தின் தன்னுரிமை, வளக்கொள்ளைக்கெதிரான மண்ணுரிமை, சமூக நீதி, மாநிலத்தன்னாட்சி, ஏழ்வர் விடுதலை, மதவாதத்திற்கு எதிரான போர் போன்றவற்றில் சமரசமின்றி நின்று நிலைபெற்று தமிழகத்தின் குரலாய் ஒலிக்க வேண்டுமென சீமான் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.