ஐபிஎல் 2021 சாம்பியனாக இந்த அணி தான் முடி சூடும்! வெளிப்படையாக பெயரை கூறிய சேவாக்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஐபிஎல் 2021 தொடர் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியனாக முடி சூட வாய்ப்புள்ள அணியின் பெயரை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் அறிவித்துள்ளார்.
ஐக்கிப அரபு அமீரத்தில இன்று தொடங்கும் 2021 தொடரின் முதல் போட்டியில் மும்பை-சென்னை அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில், 2021 ஐபிஎல் சாம்பியனாக டெல்லி அல்லது மும்பை முடி சூட வாய்ப்புள்ளதாக சேவாக் அறிவித்துள்ளார்.
இதில் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டுமென்றால் அது மும்பை தான். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும், இதனால் சென்னை மற்றும் பெங்களூரு சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை அணி பாமுக்கு வர இன்னும் சில போட்டிகள் எடுக்கலாம் என்று சேவாக் கூறினார்.
இந்தியாவில் நடந்த ஐபிஎல் முதல் கட்டத்தில் சென்னை சராசரி 201 ஆக இருந்தது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் பொறுத்தவரை சென்னை பேட்டிங்கில் பின்னடைவை சந்திக்கும் என சேவாக் தெரிவித்துள்ளார்.