பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புதிய விதி! வெளியான முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் கொரோனா பாதித்தவர்களுக்கன தனிமைப்படுத்தல் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் விதி மாற்றம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்று சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித் இன்று தெரிவித்தார்.
பிரித்தானியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் சுயமாக தனிமைப்படுத்தும் காலம் ஐந்து நாட்களாக குறைக்கப்படும்.
திங்கட்கிழமை முதல், பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கும் நபர்கள், குறைந்தபட்சம் ஐந்து முழு நாட்கள் சுய-தனிமையில் இருக்க வேண்டும்.
ஐந்தாம் நாள் மற்றும் ஆறாவது நாள் காலை lateral flow சோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என உறுதியானால், அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித் உறுதிப்படுத்தினார்.
UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்பட்டது, ஏனெனில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தல் நமது சுதந்திரத்தின் மீதான தடைகள் கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்.
இந்த நடவடிக்கையின் மூலம் பொருளாதார செயல்பாடு அதிகரிக்கும் என சாஜித் ஜாவித் கூறினர்.
கொரோனா பாதித்தவர்களின் மூன்றில் இரண்டு பேருக்கு ஐந்தாவது நாளின் முடிவில் தொற்று பாதிப்பு இருக்காது என UKHSA-வின் புதிய ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி சாஜித் கூறினார்.