சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு.., தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
சித்ராவின் தற்கொலை
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9ஆம் திகதி சென்னையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று அவரை பொலிஸார் கைது செய்தனர். பின் 2021 மார்ச் 2ஆம் திகதி ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், கடந்த 25ஆம் திகதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், 'நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். மேலும், என் மனைவி சித்ரா இறந்த உடனே நானும் இறந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன்.
ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான் தான் என என்மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிருபிக்கவே உயிரோடு இருக்கிறேன்' என தெரிவித்திருந்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
சின்னத்திரை நடிகை சித்ராவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியலிட்ட பொலிஸார் இவர்களை தீவிரமாக விசாரித்தனர்.
இந்த வழக்கின் விசாரணையானது திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியது.
மேலும், ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படததால் அவரை விடுவிப்பதாக கூறி திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்றம் நீதிபதி ரேவதி தீர்ப்பளித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |