வறுத்த எள் விதைகளை அதிகாலையில் மெல்லுவது கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
எள் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். எள் உணவிலும், மருத்துவத்திலும் அதிகம் பயன்படுகிறது.
எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது.
எள்ளில் அதிகளவு தாமிரச்சத்து, மக்னீசியம், சுண்ணாம்புசத்து, இரும்புச்சத்து, ஜிங்க், வைட்டமின் பி1, நார்ச்சத்து போன்றவை அடங்கியுள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்திற்கு நன்மை அளிக்கும். மேலும் அரை கப் எள் ஒரு கப் கால்சியத்திற்கு நிகரானது.
அதிலும் காலையில் வெற்று வயிற்றில் வறுத்த எள் உட்கொண்டால், அது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்தவகையில் தற்போது இதன் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- எள் விதைகளில் கால்சியம் நிறைந்திருப்பதால், அவை பற்கள் மற்றும் ஈறுகளைச் சுற்றியுள்ள எலும்பைப் பாதுகாக்கின்றன. பல் பற்சிப்பி உருவாக்குவதில் உதவுவதோடு, அவை பிளேக்கிலிருந்தும் பாதுகாக்கின்றன.
- அதிகாலையில் வறுத்த எள் விதைகளை மென்று சாப்பிடும்போது, அது கல்லீரல் மற்றும் வயிற்றை தூண்டுவதோடு, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது
- எலும்புகள், பற்கள் மற்றும் முடியை வலுப்படுத்த உதவுகின்றன. வயதான நபர்களுக்கு மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.
- அதோடு எள் விதைகள் வறட்டு மற்றும் தொடர் இருமலைத் தணிக்கவும் உதவுகின்றன .