இலங்கை பயணிகள் பிரித்தானியாவிற்குள் நுழைய தடை! வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை உட்பட 7 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிப்பதாக பிரித்தானிய அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் புதுப்பிக்கப்பட்ட பயண பட்டியல் நேற்று வெளியானது. இதில், பச்சை நிற பட்டியலில் புதிததாக எந்த நாடும் சேர்க்கப்படவில்லை.
ஆனால், எதிர்பார்க்கப்பட்டதை போல பச்சை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட போர்ச்சுகல், அம்பர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இதனால், ஜூன் 8ம் திகதி முதல் பிரித்தானியர்கள் போர்ச்சுகல் நாட்டிற்கு அத்தியாவசிய காரணமின்றி பயணிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போர்ச்சுகல் நாட்டிலிருந்து பிரித்தானியா திரும்புவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
அதே போல், பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கோஸ்ட்டா ரிக்கா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் Trinidad and Tobago ஆகிய 7 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஜூன் 8ம் திகதி முதல் இந்த 7 நாட்டிலிருந்து வரும் பிரித்தானியா குடிமக்கள் அல்லது பிரித்தானியாவில் விசிக்கும் உரிமை உள்ளவர்கள் தவிர மற்ற பயணிகள் நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை.
இந்த 7 நாடுகளிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகள், தலா ஒருவருக்கு 1,750 பவுண்ட் செலவில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் தங்க வேண்டும்.