தாயுடன் காரில் செல்லும் போது திடீரென கழுத்தில் பாய்ந்த குண்டு.. துடிதுடிக்க உயிரைவிட்ட குழந்தை! என்ன நடந்தது? நீடிக்கும் மர்மம்
அமெரிக்காவில் தாயுடன் காரில் செல்லும் போது 7 வயது குழந்தை மர்மமான முறையில் கழுத்தில் குண்டு தாக்கி இறந்த சமப்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட கரோலினா மாநிலத்தில் உள்ள Hickory பகுதியில் புதன்கிழமை இரவு 11 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டு கிடந்த Zakylen Greylen Harris என்ற 7 வயது குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது தாய் கார் ஓட்ட, பின்னால் உள்ள இருக்கையில் தனது இரண்டு இளைய சகோதர்களுடன் Harris அமர்ந்திருந்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதன் படி சந்தேகநபர் குறித்த சில விவரங்களை மட்டும் வெளியிட்டுள்ளனர், சிறிய SUV காரிலிருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் பலர் பயணித்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த காரின் முன் இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்திருந்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து Harris-யின் தாய் பொலிசாரிடம் கூறியதாவது, குறித்த சிறிய SUV காரிலிருந்த பெண் என்னை பார்த்து திட்டினார், அவர் கூறியது எனக்கு புரிவதற்குள் அந்த காரிலிருந்து பயணி ஒருவர் துப்பாக்கியை எடுத்து என் காரை நோக்கி சுட்டார் என தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணையில், தான் தற்செயலாக அவர்களின் காரை ஏடாகூடமாக முந்திச் சென்றிருக்கலாம், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர்கள் சுட்டிருக்கலாம் என தான் நம்புவதாக Harris-யின் தாய் தெரிவித்துள்ளார்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா அல்லது சாலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடத்தப்பட்டதா என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இது ஒரு அறிவற்ற வன்முறைச் செயல். இதற்கு எந்தவிதமான மன்னிப்பும் இல்லை என்று Hickory காவல்துறைத் தலைவர் Thurman Whisnant கூறியுள்ளார்.