ஜேர்மனியில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த துயரம்
ஜேர்மன் நகரமொன்றில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் சிலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
கட்டுமானப்பணியின்போது நிகழ்ந்த விபத்து
ஜேர்மனியின் Hamburg நகரில், கட்டிடம் ஒன்றின் எட்டாவது மாடியில் லிஃப்ட் அமைக்கும் பணியில் சில பணியாளர்கள் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.
திங்கட்கிழமை காலை 9.10 மணியளவில், அவர்கள் நின்று வேலை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தாங்கும் அமைப்பு நிலைகுலைய, எட்டாவது மாடியிலிருந்து அவர்கள் கீழேவிழுந்துள்ளார்கள்.
நான்கு பேர் பலி
இந்த துயர சம்பவத்தில் நான்கு பேர் பலியானதாக தீயணைப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
rc/rt (dpa, AP)
மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், பலர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளதாகவும்,அவர்களை மீட்கும் பணி வேகமாக நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ள அவர், விபத்துக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவரவில்லை என்றும் கூறியுள்ளார்.
rc/rt (dpa, AP)
உயிரிழந்தவர்கள், பல்கேரியா நாட்டவர்கள் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
rc/rt (dpa, AP)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |