சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! பலர் பலியான சோகம்.. பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
சீனாவில் திடீரென்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் தென் மேற்கு பகுதியாகிய கிச்சுவான் மாகாணத்தில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்ட நிலநடுக்கம் ரிக்டர் கணக்கில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த சம்பவத்தில் 3 பேருக்கு பலத்த காயமும், 50 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் நிலநடுக்கத்தில் 2 பேர் சிக்கி, உடல் நசுங்கி பலியாகியுள்ளார். மேலும் அப்பகுதியில் பல வீடுகள், மரங்கள் சாய்ந்து விழ்ந்துள்ளதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதற்கு முன் 2008ஆம் ஆண்டு கிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.