ரூ.250 கோடி சம்பளம்.., ஆனால் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடும் நடிகர்: யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் அனைவரும் மிக கடுமையான சோதனைகளை கடந்து தான் ரசிகர்களின் அங்கீகாரத்தை பெற்றனர்.
இன்றைக்கும் பல நடிகர்கள் தங்களது கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள்.
அந்தவகையில், இந்தி சினிமாவில் முன்னேற துடிக்கும் பல இளம் நடிகர்களுக்கு ஷாருக்கான் முன்மாதிரியாக இருந்து வருகிறார்.
சினிமாவுக்குள் நுழைந்த புதிதில் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்த ஷாருக்கான் இன்று இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய படங்கள் சுமார் ரூ. 2500 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது.
இன்று முன்னணி நடிகராக மாறி இருந்தாலும் தான் கஷ்டப்பட்ட தருணங்களை ஷாருக்கான் பல மேடைகளில் எடுத்து கூறி வருகிறார்.
அதேபோல், தனது உணவு கட்டுப்பாட்டை ஆரம்ப காலம் முதல் இப்போது வரையிலும் கடைபிடித்த வருகிறார் நடிகர் ஷாரூக்கான்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் "ஷூட்டிங்கை முடித்து விட்டு நள்ளிரவு 2 மணிக்கு வந்தாலும், அடுத்து 3 மணி நேரம் ஒர்க் அவுட் செய்கிறேன்.
அதன்பின்னர் 5 மணிக்குத்தான் தூங்கச் செல்வேன். ஷூட்டிங் இருந்தால் காலையில் 9 மணியிலிருந்து 10 மணிக்கு எழுவேன்.
தினமும் ஒரு வேளை தான் சாப்பிடுவேன்,அது எனது விருப்பம். மேலும் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இவர் ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |