இந்திய வீரர்களிடம் கைகுலுக்க காத்திருந்த அஃப்ரிடி, உஸ்மான்? வைரல் வீடியோ..உண்மை என்ன?
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஷாஹீன் அஃப்ரிடி, உஸ்மான் தாரிக் இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் கைகுலுக்க காத்திருந்ததாக வீடியோ வெளியாகி கேள்விகளை எழுப்பியுள்ளது.
பரவி வரும் ஒரு வீடியோ
கொழும்பில் நடந்த டி20 உலகக்கிண்ணம் 2026 போட்டியில், இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
Shaheen Shah Afridi and Usman Tariq kept waiting for the Indian team to shake hands.
— Rohan💫 (@rohann__45) February 16, 2026
Chad Indian team didn’t even look at them.🗿💀
Unreal beizzati of Pakistanis.😭🤣🔥#INDvsPAK pic.twitter.com/UKf9DrBE8V
போட்டி முடிந்ததும் இருநாட்டு வீரர்களும் விளையாட்டு சம்பிரதாயப்படி கைகுலுக்க முன்வரவில்லை. இது பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி, உஸ்மான் தாரிக் இருவரும் ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது இடையில் நின்று இந்திய வீரர்களை பார்க்கின்றனர்.
ஆனால், இந்திய வீரர்கள் வெற்றியைக் கொண்டாட தனித்தனியாக கூடினர். அவர்கள் பாகிஸ்தான் வீரர்களை பார்க்கவில்லை.
பின்னர் அஃப்ரிடியும், உஸ்மானும் மைதானத்தை விட்டு வெளியேறினர். இது ஒன்லைனில் விவாதத்தை ஏற்படுத்தியது.
கைகுலுக்காத கொள்கை
பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கலை எதிர்பார்த்து காத்திருந்தார்களா என்பது உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.
அவர்கள் பெவிலியனுக்கு செல்லும் முன்பு மைதானத்தை சரிபார்ப்பது போலவும் வீடியோவில் தெரிகிறது.
2025 ஆசியக் கிண்ணத்திற்கு பிறகு கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் இந்தியா கைகுலுக்காத கொள்கையை பராமரித்து வருகிறது.
அதனாலேயே அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. போட்டிக்கு முன்பே இந்தியாவின் சூர்யகுமார், பாகிஸ்தானின் சல்மான் அலி ஆகா இருவரும் நாணய சுழற்சியின்போது கைகுலுக்கலைத் தவிர்த்தனர்.
இது நிலைப்பாடு மாறாமல் இருப்பதைக் குறிக்கிறது. டி20 உலகக்கிண்ணத்தில் கொள்கையின் தொடர்ச்சி, அது ஒரு தனிப்பட்ட வீரர் தேர்வை விட, ஒரு நிறுவன முடிவாகவே உள்ளது என்பதைக் குறிக்கிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |