நடுவர் அவுட் கொடுக்காத ஆத்திரத்தில் ஸ்டம்பை உதைத்து பிடுங்கி வீசி எறிந்த ஷகிப் அல் ஹசன்! வீடியோ வைரலான நிலையில் தண்டனை அறிவிப்பு
கிரிக்கெட் போட்டியின் போது ஸ்டம்பை பிடுங்கி எறிந்து, அம்பயருடன் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் பாணியில் வங்கதேசத்திலும் டாக்கா பிரீமியர் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை அபஹானி மற்றும் மொஹம்மதன் அணிகளுக்கிடையிலான லீக் போட்டி தானாவில் அரங்கேறியது.
இப்போட்டியில் அபஹானி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அந்த அணியின் முஷ்பிகுர் ரஹ்மானுக்கு களநடுவர் எல்.பி கொடுக்க மறுத்திருக்கிறார்.
இதனால் கோபமடைந்த மொஹம்மதன் அணியின் கேப்டன் ஹகிப் அல் ஹசன் ஸ்டம்புகளை எட்டி உதைத்தோடு மட்டுமல்லாமல், ஸ்டம்புகளை தூக்கி அடித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Genuinely unbelievable scenes...
— 7Cricket (@7Cricket) June 11, 2021
Shakib Al Hasan completely loses it - not once, but twice!
Wait for when he pulls the stumps out ? pic.twitter.com/C693fmsLKv
அதன் தொடர்ச்சியாக எதிரணி கோச்சான கலீல் மஹ்மூத்திடமும் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டார். ஷிகிப் அல் ஹசனின் இந்த செயல் உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது.
தன்னுடைய தவறுக்காக ஃபேஸ்புக்கில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார் ஷகிப் அல் ஹசன். இருப்பினும் இது கிரிக்கெட் விதிகளுக்கு முரணான செயல் என்பதால் அவர் மீது ஒழுங்கீன நடவடிக்கையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் எடுத்திருக்கிறது.
டாக்கா பிரிமியர் லீக்கில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஷகிப் அல் ஹசனுக்கு டாக்கா பிரிமியர் லீக்கில் 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இது தவிர 5 லட்சம் Taka (5800 அமெரிக்க டொலர்கள்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஷகிப் அல் ஹசனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை மிகவும் சிறியது எனவும் அவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.