பாகிஸ்தான் வெற்றி பெற என்னிடம் 1.50 கோடி ரூபாய் பேரம் பேசினார்! ஷேன்வார்னே சொன்ன அதிர்ச்சி தகவல்
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்னே தன்னிடம் நடந்த மேட்ச் பிக்ஸிங் பற்றி கூறியுள்ளார்.
பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் Shane என்ற டாக்குமெண்டரி உருவாகி வருகிறது. இதில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து, வார்னே பல விஷயங்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில், குறிப்பாக, கடந்த 1994-ஆம் ஆண்டு தமக்கு கிடைத்த மோசமான மேட்ச் பிக்சிங் அனுபவம் குறித்து கூறியுள்ளார். 1994-ஆம் அண்டு கராச்சி டெஸ்டில் நான்காம் நாள் ஆட்டமுடிவில் பாகிஸ்தான் கேப்டன் சலீம் மாலிக் என்னை ஹோட்டலில் வந்து பார்க்கும் படி அழைத்தார்.
அந்த ஆட்டத்தில் இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆட்டம் முடிந்ததும் நானும் சலீம் மாலிக்கை சந்தித்தேன் அப்போது, என்னை அவரது அறைக்கு உள்ளே அழைத்து சென்று இந்தப் போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார்.
அதன் பின் அவர், இந்த டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் ரசிகர்கள் எங்களது வீட்டையும், உறவினர்கள் வீட்டையும் எரித்து விடுவார்கள்.
இதனால், கடைசி நாள் ஆட்டத்தில், நீங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். விக்கெட் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பந்துவீச கூடாது. இதற்காக ஒன்றரை கோடி ரூபாய் பணம் தருவதாக கூறினார்.
ஆனால் நான் அவரை திட்டுவிட்டு வந்துவிட்டேன். அந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றாலும் வார்னே 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, பின்னர் 2000-ஆம் அண்டு சலீம் மாலிக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.