மகள் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்த தாய்: தலை துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ஜனாதிபதி
இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் திடீர் தாக்குதல் நிகழ்த்திய நிலையில், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த இளைஞர்கள், இளம்பெண்கள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டார்கள்.
அவர்களில், ஒரு அழகிய இளம்பெண்ணின் உடலை, அரை நிர்வாண நிலையில், வாகனம் ஒன்றில் தூக்கிப்போட்டு, அந்த உடல் மீது காலைப் போட்டபடி, அதன் மீது எச்சில் துப்பியவண்ணம் தெருக்களில் உலாவந்தனர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் சிலர். அந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாக, உலகமே பதைபதைத்தது.
உயிருடன் இருப்பதாக கிடைத்த தகவல்
அந்த இளம்பெண்ணின் பெயர் Shani Louk (22).அவர் ஒரு ஜேர்மானிய இஸ்ரேலியப் பெண். ஆனால், அவர் உயிருடன் இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தார் Shaniஇன் தாயான Ricarda Louk.
Credit: shanukkk/Instagram
அந்த செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தினர் Shani உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்த நிலையில், தற்போது Shani உயிருடன் இல்லை, அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்னும் செய்தி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவரது தாய்.
துரதிர்ஷ்டவசமாக, தன் மகள் உயிருடன் இல்லை என நேற்று முன்தினம் தனக்கு தகவல் கிடைத்ததாக ஜேர்மன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் Ricarda.
மருத்துவர்கள் தெரிவித்துள்ள பயங்கர செய்தி
இந்நிலையில், கொல்லப்பட்டவர்களின் உடல்களை சேகரிக்கச் சென்ற குழுவினரிடம், Shaniயின் மண்டை ஓட்டிலுள்ள ஒரு துண்டு கிடைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Credit: shanukkk/Instagram
அப்படி ஒரு மண்டை ஓட்டிலுள்ள துண்டு தனியாக கிடைக்கவேண்டுமானால், அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Shani குறித்து பேசிய இஸ்ரேல் ஜனாதிபதியான Isaac Herzog, அப்படியானால், ஹமாஸ் குழுவினர் Shaniயின் தலையைத் துண்டித்து அவரைக் கொன்றிருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.
Credit: Getty
அத்துடன், இது மிகப்பெரிய துயரம் என்று கூறியுள்ள அவர், Shaniயின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
Credit: Shani Nicole Louk/CEN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |