ஆண்டர்சன் சொல்ல கூடாத மோசமான வார்த்தையை பேசினார்! நடராஜனை மட்டும் அப்படி அச்சுறுத்தலாமா? உடைத்து பேசிய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர்
லார்ட்ஸ் டெஸ்ட்டின் போது இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனுடனான மோதல் குறித்து இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் தற்போது மனம் திறந்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் சவால்கள் பொறிபறந்தன, பல வார்த்தை மோதல்கள், கிண்டல்கள், கேலிகள் என்று இருதரப்புமே டெஸ்ட் போட்டியை வண்ணமயமாக்கினர்.
இதில் லார்ட்ஸ் டெஸ்ட் சம்பவம் தொடர்பாக ஷர்துல் தாக்கூர் விவரித்துள்ளார். அவர் கூறுகையில், ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தாக்குதல் பவுலிங் செய்தோம், லார்ட்ஸ் டெஸ்ட் விவகாரம் ஓவல் டெஸ்ட் வரை வந்தது. ஆண்டர்சன் பும்ராவை நோக்கி சொல்லக்கூடாத வார்த்தை ஒன்றைக் கூறி வசைபாடியிருந்தார் என்று எனக்கு கூறினர்.
பும்ராவை அசிங்கப்படுத்திவிட்டனர் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அந்த வார்த்தைகள் என்னவென்பதை பப்ளிக்காக சொல்ல முடியாது. அதன் பிறகுதான் நாங்கள் ஆவேசமடைந்தோம். நாம் வெளிநாடுகளில் சென்று ஆடும் போது நம் அணியின் டெய்ல் எண்டர்கள் ஏகப்பட்ட பவுன்சர்களை எதிர்கொண்டுள்ளனர்.
நடராஜனுக்கு பவுன்சர் மழையை ஸ்டார்க்கும், கமின்சும் பொழிந்தனர். ஆனால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் முதல் தர கிரிக்கெட் கூட ஆடாத நடராஜனுக்குத்தான் அவர்கள் வீசுகிறார்கள் என்று, யார் இதை தட்டிக் கேட்டார்கள்?
இப்படியிருக்கும் போது நாம் மட்டும் ஏன் எதிரணி டெய்ல் எண்டர்களுக்கு பவுன்சர்களை வீசக்கூடாது? ஏன், ‘பாடிலைன்’ போடக்கூடாது என கூறியுள்ளார்.