ஹார்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக இவரை ஆல் ரவுண்டராக உருவாக்குகிறோம்! உண்மையை உடைத்த இந்திய பயிற்சியாளர்
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி தேர்வில் ஹார்திக் பாண்ட்யாவின் பெயர் இடம் பெறாத நிலையில், அது குறித்தும், அவருக்கு பதிலாக வேறொரு வீரரை ஆல் ரவுண்டராக மாற்றப் போவதாக அந்தணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில், வரும் ஜுன் மாதம் 22-ஆம் திகதி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த உலகக்கோப்பையை கைப்பற்றிவிட வேண்டும் என்று இரண்டு அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதன் படி இந்திய அணி சமீபத்தில் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியை அறிவித்தது.
அதில், ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யாவின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் இந்திய தேர்வுகுழுவை பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறுகையில், இந்திய அணிக்கு ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் தேவை. பேட்ஸ்மேன்கள் எத்தனை பேர் வேண்டும் என்றாலும் கிடைப்பார்கள்.
ஆனால் இந்திய அணிக்கு ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் வேண்டும். ஹார்திக் பாண்ட்யா வந்த புதிதில், அவர் கபில் தேவ் போன்று சிறந்த ஆல் ரவுண்டராக வருவார் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால், காயத்திற்கு பின் அதிலிருந்து மீண்டாலும், முன்பு போல் பந்து வீச முடியவில்லை. இதனால் நாங்கள் ஷாகூல் தாகூரை ஒரு ஆல் ரவுண்டராக உருவாக்கி வருகிறோம் என்று கூறியுள்ளார்.