இந்தியாவுடன் தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்ளுங்கள்... அமெரிக்கா பிரித்தானியாவுக்கு கோரிக்கை விடுக்கும் இளவரசர் ஹரியும் மேகனும்
பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் Global Canada Citizen என்ற அமைப்பும் Selena Gomez என்ற பிரபலமும் இணைந்து நடத்தும் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருக்கிறார்கள்.
அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, தடுப்பூசிகளை மற்ற நாடுகளுடன், குறிப்பாக இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு, ஹரியும் மேகனும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வரையிலான தலைவர்களை வலியுறுத்த இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், புதிதாக லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.
மருத்துவமனைகளில்ஆக்சிஜன் பற்றாக்குறை முதல் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடமின்மை வரை பல்வேறு பிரச்சினைகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
அமெரிக்காவிலுள்ள மொத்த 60 மில்லியன் டோஸ் ஆஸ்ராசெனகா தடுப்பூசி மருந்தையும் இந்தியாவுக்கு வழங்குமாறு அமெரிக்காவில் கோரிக்கை வலுத்து வருகிறது.
அமெரிக்கா, உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், ஒப்புதல் கிடைத்ததும் 60 மில்லியன் டோஸ் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி மருந்தையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப இருப்பதாகவும் நேற்று அறிவித்தது.
அதேநேரத்தில், பிரித்தானியா அதேபோன்ற ஒரு கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், எங்களிடம் உபரி தடுப்பு மருந்து இல்லை என்று கூறிவிட்டதுடன், இப்போதைக்கு பிரித்தானியாவில் தடுப்பூசி போடும் திட்டத்தின் மீதே கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறிவிட்டார்.