எனக்கு நேர்ந்தது எனது மகளுக்கு வேண்டாம்... இந்திய தாயாரின் செயலுக்கு குவியும் அமெரிக்க மக்களின் பாராட்டு
அமெரிக்காவில் தமது 12 வயது மகளின் மேல் உதட்டு ரோமங்கள் மற்றும் புருவங்களை மழித்த இந்திய தாயாரின் செயலை பெரும்பாலான மக்கள் பாராட்டியுள்ளனர்.
இந்தியவம்சாவளி தாயார்
சிறு வயதில் தாம் அனுபவித்த கொடூர நெருக்கடியை தமது மகள் தற்போது அனுபவிக்க வேண்டாம் என இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அந்த இந்தியவம்சாவளி தாயார் குறிப்பிட்டுள்ளார்.
@Tiktok
வட கரோலினா மாகாணத்தில் குடியிருக்கும் 38 வயதான இந்திய வம்சாவளி விதயா கோபாலன் இரண்டு பிள்ளைகளுக்கு தாயார். தமது சமூக ஊடக பக்கத்தில், தமது மற்றும் தனது 12 வயது மகள் தொடர்பிலும் காணொளி பதிவுகளை அடிக்கடி பகிர்ந்து வருபவர்.
மிக சமீபத்தில் தமது 12 வயது மகள் சஹானா தொடர்பில் காணொளி ஒன்றை பகிர்ந்து கொண்ட வித்யா கோபாலன், பெரும்பாலான மக்களின் பாராட்டுதலை பெற்றுள்ளார்.
குறித்த காணொளியில் சிறுமி சஹானாவின் புருவம் மற்றும் மேல் உதட்டு ரோமங்களை வித்யா மழிப்பது பதிவாகியிருந்தது. சஹானாவின் வயதில் தமது தாயார் இப்படியான ஒரு முடிவுக்கு வரவில்லை என்பதால், தாம் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் வித்யா கோபாலன் குறிப்பிட்டுள்ளார்.
@Tiktok
சுமார் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ள அந்த காணொளியானது, வித்யாவே தமது மகளின் புருவம் மற்றும் மேல் உதட்டு ரோமங்களை மழிப்பது பதிவாகியுள்ளது.
கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கானேன்
உனது வயதில் இப்படியான ரோமங்கள் காரணமாக கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கானேன் என வித்யா தமது மகளிடம் கூறுகிறார். அதற்கு பதிலளித்த சஹானா, அப்படியானால் ஏன் உங்கள் இளவயதில் இப்படியான ரோமங்களை மழிக்க முன்வரவில்லை என கேள்வி கேட்கிறார்.
தமது தாயார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார் வித்யா. இந்த காணொளிக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்களது இதயத்தை தொட்ட காணொளி இதுவெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
@instagram
பலர் இதுபோன்ற ஒரு சூழலை தாங்களும் எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். இது தன்னம்பிக்கை மற்றும் சுய பாதுகாப்பு தொடர்பானது என்பதை உணர்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |