அமெரிக்க அணியில் அரைசதம் விளாசிய இலங்கை வீரர்
நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணி 195 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஷெஹான் ஜெயசூரியா அரைசதம்
அமெரிக்கா மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கிர்திபூரில் நடந்து வருகிறது.

துடுப்பாட்டத்தை தொடங்கிய அமெரிக்க அணியில் ஷயன் ஜஹாங்கீர் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஸ்மித் பட்டேல் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஷெஹான் ஜெயசூரியா இருவரும் வலுவான கூட்டணி அமைத்தனர்.
நிதானமாக ஓட்டங்களை சேர்ந்த ஷெஹான் ஜெயசூரியா (Shehan Jayasuriya) 52 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
சுருண்ட அமெரிக்கா
அடுத்து அணித்தலைவர் சாய்தேஜா 4 ஓட்டங்களில் லாமிச்சேன் பந்துவீச்சில் போல்டு ஆனார். மிலிந்த் குமார் நின்று ஆட, 83 ஓட்டங்கள் குவித்த ஸ்மித் படேல் சோம்பல் கமி ஓவரில் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய, அமெரிக்க அணி 43.3 ஓவர்களில் 195 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மிலிந்த் குமார் 28 ஓட்டங்கள் எடுத்தார். மிரட்டலாக பந்துவீசிய திபேந்திர சிங் ஐரி 4 விக்கெட்டுகளும், சோம்பல் கமி 2 விக்கெட்டுகளும், சந்தீப் லாமிச்சேன் மற்றும் குல்சன் ஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |