இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடாது! இறுதியாக கூறிய ஷெபாஸ் ஷெரீஃப்
2026 டி20 உலகக்கிண்ணத்தின் குழுநிலை ஆட்டத்தில் இந்தியாவை பாகிஸ்தான் அணி எதிர்கொள்ளாது என்று ஷெபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளார்.
குரூப் ஏ போட்டி
பிப்ரவரி 15ஆம் திகதி அன்று கொழும்பில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் ஏ போட்டி திட்டமிடப்பட்டது.
ஆனால், வங்காளதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கும் தகவல் வெளியானது.
மேலும், இந்த முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு முறையாக தெரிவிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டதாகவும் தெரிய வந்தது.
மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்
இந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif), "டி20 உலகக்கிண்ணம் குறித்து நாங்கள் ஒரு மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.
நாங்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம். ஏனெனில் இது விளையாட்டுத் திடல், அரசியல் அல்ல" என்று கூறினார்.
இந்தப் புறக்கணிப்பு குறித்து பாகிஸ்தான் ஐசிசி-க்கு எந்த அதிகாரப்பூர்வ மின்னஞ்சலையும் அனுப்பாது என்றும், இது போட்டி ரத்து செய்யப்படாமல் இருப்பதற்கும், புறக்கணிப்பைச் சுற்றியுள்ள சர்ச்சை தொடர்வதற்கும் வழிவகுக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |