இந்த ஐபிஎல் தொடரை இந்த அணி தான் ஜெயிக்கும்! கோப்பையை தட்டி தூக்குவாங்க பாருங்க... உறுதியாக கூறும் சேவாக்
ஐபிஎல் 2021 தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெல்லும் என விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி கடந்த 19ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் ? என்பது குறித்த கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ஷேவாக் இந்த ஐபிஎல் தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் ? என்ற தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இரண்டாவது கட்டப் போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மைதானங்களில் நடைபெறுவதால் டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.
அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இம்முறை கோப்பையை கைப்பற்ற கூடுதலான வாய்ப்புகள் இருக்கிறது. இந்தியாவில் சென்னை அணி சிறப்பாக விளையாடி இருக்கலாம் ஆனால் இங்கு அதுபோன்று விளையாட முடியாது.
எனவே இந்த ஐபிஎல் தொடரை கைப்பற்ற போகும் அணி எது என்று என்னிடம் கேட்டால் நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் என்றுதான் கூறுவேன் என தெரிவித்துள்ளார்.