தோனி, அஸ்வினுக்கு இந்த செயலை செய்வதற்கான அனுமதியை ஒரு போதும் கொடுத்ததில்லை! ரகசியம் உடைத்த சேவாக்
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி வீரர் அஸ்வின் விக்கெட் எதுவும் வீழ்த்தாத நிலையில் அவர் பந்துவீச்சு தொடர்பில் இந்திய கேப்டனாக தோனி நடந்து கொண்ட விதம் குறித்து சேவாக் பேசியுள்ளார்.
நேற்று நடைபெற்ற டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 2.5 ஓவர்கள் வீசி 22 ரன்களை கொடுத்த தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை.
அவரின் பந்துவீச்சு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக்கை ஈர்க்கவில்லை. அவர் பேசுகையில், அஷ்வின் தனது பந்துவீச்சில் அதிகப்படியான பரிசோதனை செய்து வருவதாக கருதுகிறேன்.
உண்மையில் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி, அஸ்வின் அது போல பரிசோதனை முறை பந்துவீச்சை மற்றுவதற்கு ஒரு போது அனுமதிக்கவில்லை.
தன்னுடைய சுழற்பந்து வீச்சில் யாராவது ஒரு பவுண்டரி அல்லது ஒரு சிக்ஸர் அடித்துவிடுவார்கள் என்ற மனநிலை அஸ்வினுக்கு உள்ளது. இந்த பயத்தின் காரணமாக, அவர் பரிசோதனையை நாடுகிறார்.
எம்எஸ் தோனி விக்கெட்டுகளுக்குப் பின்னால் இருந்தபோது, அவர் அஷ்வினை பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.