பயங்கர புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய 129 அடி கப்பல்.. பலர் மாயம்! வெளியான பரபரப்பு வீடியோ
அமெரிக்காவின் லூசியானா கடற்கரையில் 129 அடி ‘Seacor Power’ வணிகக் கப்பல் புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் கப்பல் மூழ்கியதை தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகைள தொடங்கியுள்ளனர்.
சம்பவத்தின் போது கப்பலில் மொத்தம் 19 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியானது. மாயமான 19 பேரில் ஒருவர் சடலமாகவும், மற்ற 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தளபதி வில் வாட்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மீதமுள்ள 12 பேரை தேடும் பணியில் அமெரிக்க கடலோர காவல் படையுடன் இணைந்த நான்கு தனியார் கப்பல் ஈடுபட்டுள்ளதாக வில் வாட்சன் தெரிவித்துள்ளார்.
Seacor Power வணிகக் கப்பல் கவிழும் போது 129 கி.மீ முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும், 7 முதல் 8 அடி வரை அலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.