புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்த கப்பல்! உள்ளே இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரம்... அதில் ஏற்பட்ட சவால்
அமெரிக்காவில் புயலில் சிக்கி கப்பல் கவிழ்ந்த நிலையில் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் லூசியானா அருகே வணிக கப்பல் ஒன்று கவிழ்ந்தது.
விபத்து நடந்த அரைமணி நேரத்தில் நிகழ்விடத்திற்கு சென்ற அமெரிக்க கடலோர காவல் படையினர் கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒருவர் உயிரிழந்த நிலையிலும், 6 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 12 பேரை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.
விபத்து நடந்த பகுதியில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசுவதால் மீட்பு பணி சவாலாக இருப்பதாக கடலோர காவல் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இருந்த போதிலும் பணியானது தொடர்ந்து நடந்து வருகிறது.