ஜேர்மனியில் பரபரப்பு! துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு மர்ம நபர் வெறிச்செயல்
ஜேர்மனியில் மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஜேர்மனியில் உள்ள Espelkamp நகரின் மையத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
இதில், ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பி ஓடிவிட்டதாகவும், தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Espelkamp அடுக்குமாடி குடியிருப்பில் முதல் நபர் சுடப்பட்டதாகவும், பின் அதன் அருகில் உள்ள தெருவில் மற்றொருவர் சுட்டு கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.