பர்தா எங்கே? ஜீன்ஸ் அணிந்து கடைக்கு வந்த இளம்பெண்ணை அடித்து உதைத்த முதியவர்! அசாமில் நடந்த கொடூரம்
இந்தியாவில் புர்கா அணியாமல் ஜீன்ஸ் அணிந்து வந்த இளம்பெண்ணை கடையில் இருந்து வெளியே துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள சரியாளி எனும் பகுதியில் நூருல் ஆமின் என்ற முதியவர் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு போன் வாங்குவதற்காக இளம்பெண் ஒருவர் வந்துள்ளார்.
அப்போது அந்த பெண் ஜீன்ஸ் அணிந்து வந்து இருந்ததால் தனது கடையில் இருந்து உனக்கு பொருள்கள் விற்பனை செய்ய முடியாது என்று கோவமாக கூறியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் புர்கா அணியாமல் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்ததால் இளம்பெண்ணை அவமதித்து தனது கடைக்குள் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளார்.
அங்கு இருந்து வெளியேறிய பெண் தனது வீட்டுக்கு வந்து நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பெண்ணின் தந்தை தனது மகளை அவமதித்ததற்காக தட்டிக் கேட்க நூருலின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது நூருல் மற்றும் அவரின் குடும்பத்தினர் சேர்ந்து கொண்டு இளம்பெண்ணின் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடைக்காரரான முதியவர் நூருலும் அவரின் குடும்பத்தாரும் சேர்ந்து அவரை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.