ஒன்பது மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி: வெளிநாடொன்றில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்
அவுஸ்திரேலிய நகரமொன்றில், மால் ஒன்றில் திடீரென மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதில், ஒன்பது மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலியான அதிரவைக்கும் சம்பவம் ஒன்று சற்று முன் நடந்தேறியுள்ளது.
பயங்கர கத்திக்குத்து சம்பவம்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் இன்று மதியம் உள்ளூர் நேரப்படி 3.45 மணியளவில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களைக் கத்தியால் தாக்கத் துவங்கியுள்ளார்.
That was close… heard gunshots at Westfield Bondi Junction during haircut… then people running and shop shutters going down before evac siren. Thank you to staff at @justcutssalons BJ who helped us exit. Prayers for any victims. Please don’t let this be the new normal pic.twitter.com/Z9AOuPvCeb
— Mark Hudson (@mhudson) April 13, 2024
அந்த பயங்கர தாக்குதலில், ஒரு பெண், ஒரு ஒன்பது மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக ஆயுதங்களுடன் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்த பொலிசார், பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் யார், எதற்காக இந்த தாக்குதல் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |