இரத்த சர்க்கரை அளவு எகிறாமல் இருக்கணுமா? அப்போ இந்த அற்புத பானங்களை தவறாமல் குடிங்க!
Ginger
Neem
Diabetes
By Kishanthini
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும்.
எனவே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதற்கு மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம்.
குறிப்பாக ஒருசில பானங்களை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
image - netmeds
- துளசியை தினமும் மென்று சாப்பிடலாம். இல்லாவிட்டால் ஒரு டம்ளர் நீரில் 6-8 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிக்கலாம்.
- இஞ்சியை ஒரு டம்ளர் நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடித்து வருவது, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
- சிறிது வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
- ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
- வேப்பிலையை மென்று சாப்பிடலாம் அல்லது 7-8 வேப்பிலையை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US