பஞ்சாயத்து பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் - சாதித்த ஸ்ராவணி
நீட் மறுதேர்வில் பஞ்சாயத்து பள்ளியில் படித்த சேர்ந்த ஸ்ராவணி குடாலே(தேசிய அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியாக சந்தித்துள்ளார்.
நீட் மறுதேர்வு முடிவு
2026 - 2027 மாணவர் சேர்க்கைக்கான கடந்த மே 3 ஆம் திகதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு, ஜூன் 22 ஆம் திகதி மறுதேர்வு நடத்தப்பட்டது.
நீட் மறுதேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. 20 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய இந்த மறுதேர்வில் 11. 21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆரியன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பான்ஷுல் பன்சால் ஆகிய இரு மாணவர்களும் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவி
மகாராஷ்டிரவின் புனே மாவட்டம், பாராமதி தாலுகாவை சேர்ந்த ஸ்ராவணி குடாலே(shravani kudale), 710 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவியாக உள்ளார்.

ஸ்ராவணி குடாலே, மகாராஷ்டிர மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 5வது இடமும் பிடித்துள்ளார்.
ஸ்ராவணி குடாலேவிற்கு மகாராஷ்டிர துணை முதல்வர் துணை முதலமைச்சர் சுனேத்ரா அஜித் பவார், காணொளிக் காட்சி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
ஸ்ராவணியின் பெற்றோர்களான ஜெயஸ்ரீ மற்றும் கிருஷ்ணா இருவரும் மாவட்டப் பஞ்சாயத்து பள்ளி ஆசிரியர்கள் ஆவர்.
இது குறித்து பேசிய ஸ்ராவணி குடாலே, "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது ஒரு கனவு நனவானது போல் உணர்கிறேன்.
எனது பள்ளிப் பருவத்திலிருந்தே நீட் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருந்தேன்.
நான் 9 ஆம் வகுப்பில் படிக்கும்போதே தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினேன் நான் எனது ஆரம்பக் கல்வியை மாவட்டப் பஞ்சாயத்து பள்ளியிலும், இடைநிலைக் கல்வியை பகுதி ஆங்கில வழிப் பள்ளியிலும் முடித்திருந்தபோதிலும், ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வதில் எனக்கு ஒருபோதும் எந்தச் சிரமமும் இருந்ததில்லை.
மே மாதம் நடந்த எனது முந்தைய தேர்வில், நான் சுமார் 715 மதிப்பெண்களை எதிர்பார்த்தேன், ஆனால் எனது தரவரிசை குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இந்த மறுதேர்வை ஒரு புதிய வாய்ப்பாகக் கருதி, முழு அர்ப்பணிப்புடன் தயாரானேன்.
படிப்பில் கவனம் செலுத்துவதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக கைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருந்தேன். முந்தைய தேர்வோடு ஒப்பிடும்போது, இரண்டாவது நீட் தேர்வு கடினமாக இருந்தது" என தெரிவித்துள்ளார்.
மகளின் வெற்றி குறித்து பேசிய அவளது பெற்றோர், "அவள் சிறப்பாகச் செயல்படுவாள் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம், ஆனால் அவள் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்துவாள் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

அவளுடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆசிரியர்கள் வழங்கிய வழிகாட்டுதல் ஆகியவை பலனளித்துள்ளன. பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் மகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்" என தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |