அறிமுக டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த ஸ்ரோயஸ் ஐயர்!
அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் விளாசி இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
நவம்பர் 25ம் திகதி கான்பூரில் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னங்ஸில் சதம் அடித்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாவது இன்னங்ஸில் அரை சதம் அடித்தார்.
இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஸ்ரோயஸ் ஐயர் படைத்துள்ளார்.
இதுவரை எந்தவொரு இந்திய வீரரும் சர்வதே அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கான்பூர் டெஸ்ட் 4வது ஆட்டத்தின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 234 எடுத்திருந்த போது டிக்ளர் செய்த இந்திய அணி, நியூசிலாந்திற்கு 284 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.
நாளை 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 280 ரன்களும், இந்திய வெற்றிக்கு 9 விக்கெட்டுகளும் தேவை.