சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியிலிருந்து விலக வாய்ப்பு., அடுத்து யார்?
இந்திய T20I அணியின் கேப்டன்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
BCCI விரைவில் நடைபெறவுள்ள தேர்வுக் கூட்டத்தில், சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
2024 T20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, ரோஹித் சர்மாவிடம் இருந்து சூர்யகுமார் யாதவ் இந்திய T20I அணியின் கேப்டன்சியை ஏற்றார்.
அதன்பின், இந்திய T20I அணியில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் சமீபத்திய நிலைமைகளின்படி, நிர்வாகம் புதிய தலைமைத்துவத்தை நோக்கி நகர விரும்புவதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஷ்ரேயஸ் அய்யர் புதிய T20I கேப்டனாக முன்னிலை தேர்வாக கருதப்படுகிறார்.
அணியின் எதிர்கால திட்டங்களில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தலைமை மாற்றம் அவசியம் என BCCI கருதுகிறது.
இந்த மாற்றம், இந்திய T20I அணியின் அடுத்தடுத்த போட்டிகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#SuryakumarYadav #ShreyasIyer #T20ICaptaincy #IndianCricket #BCCINews #CricketUpdates #TeamIndia