பாதி தூரம் தாண்டிவிட்டோம்.,அடுத்த ஆண்டு கோப்பை நிச்சயம் - சூளுரைத்த ஷ்ரேயாஸ் ஐயர்
அடுத்த ஆண்டு நிச்சயமாக ஐபிஎல் கோப்பையை வெல்வோம் என பஞ்சாப் கிங்ஸ் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
RCB சாம்பியன்
ஐபிஎல் 2025 சீஸனின் இறுதிப் போட்டியில், பெங்களூரு அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய பெங்களூரு அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
அடுத்த ஆண்டு கோப்பையை வெல்வோம்
அவர் கூறுகையில், "நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் வருத்தமாக இருக்கிறது. ஆனால் எங்கள் வீரர்கள் அந்த சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொண்டார்கள், நாங்கள் எப்படி நேசித்தோம், அது மாசற்றது அல்ல.
ஆனால் நிறைய பாராட்டுகள் நிர்வாகம், ஆதரவு ஊழியர்கள் மற்றும் பங்கேற்ற மற்றும் பங்களித்த ஒவ்வொரு நபருக்கும் சொந்தமானது.
வேலை இப்போது பாதிதான் முடிந்திருக்கிறது. நாங்கள் இங்கே இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு கோப்பையை வெல்வோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |