ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போக போகும் இளம் வீரர்? கோடிகளை கொட்ட தயார்
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை படைக்க இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார் இந்தியாவின் இளம்புயல் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஐபிஎல்லில் எங்கு சென்றாலும் கேப்டனாக மட்டுமே இருப்பேன் என அடம்பிடிக்கும் அவரை புதிதாக வந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் கேப்டனாக ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான வாய்ப்புகள் குறைந்தன.
இந்த நிலையில் அவரை ஏலத்தில் எடுக்க என்ன செலவுகள் ஆனாலும் பரவாயில்லை என்பது போல 3 அணிகள் காத்துள்ளன என தகவல் கசிந்துள்ளது. ஆர்சிபி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தான் அவை.
குறிப்பாக ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே கடும் மோதல் இருக்கும். ஏனெனில் இரு அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை தொட்டதில்லை.
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக கிறிஸ் மோரிஸ் உள்ளார். இவரை கடந்தாண்டு ராஜஸ்தான் அணி ரூ.16.5 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் இந்தாண்டு இதனையும் முறியடித்து ஸ்ரேயாஸ் அந்த இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.