உங்களுக்கு காளான் ரொம்ப பிடிக்குமா? ஆனால் அதிகமாக எடுத்து கொண்டால் இந்த பக்கவிளைவு ஏற்படுமாம்!
Headache
Diarrhea
Bleeding
Skin allergy
By Kishanthini
காளான் என்பது மண்ணில் வளரும் ஒரு பூஞ்சைத் தாவரமாகும். உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் உணவான காளான் உள்ளது.
முக்கியமாக மூன்று வகையானயான காளான்கள் மட்டுமே சாப்பிடப்படுகின்றன.
அவை மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் போன்றவை ஆகும்.
இதில் ஒவ்வொரு காளானும் பல்வேறு சிறப்பான பயன்களைத் அள்ளி தருகின்றது.
ஆனால் அதிகமாக காளானை சேர்த்து கொள்வது தவறு. ஏனெனில் இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- சிலருக்கு காளான் சாப்பிடும் நாட்களில் வயிற்றுப்போக்கு ஏற்படும். அதுமட்டுமின்றி, மற்ற வயிற்றுப் பிரச்சனைகள், வாந்தி, தசைப்பிடிப்பு மற்றும் குமட்டல் போன்றவையும் இருக்கும்.
- காளான்கள் சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து உங்களின் உணர்வு மாறும் உட்கொண்ட பிறகு யதார்த்தத்தின் உணர்வை மாற்றும். நீங்கள் ஏதோ ஒரு மாய உலகத்தில் இருப்பதை போன்று உணர்வீர்கள். காளான் சாப்பிட்ட இருபது நிமிடங்களுக்குள் இந்த மாதிரியான உணர்வை நீங்கள் அனுபவிப்பீர்கள். இந்த உணர்வு அரை மணி நேரம் முதல் நாற்பது நிமிடம் வரை இருந்து பின்னர் இயல்பான நிலைக்குத் திரும்புவீர்கள்.
-
சிலருக்கு காளான்கள் சாப்பிடுவதால் சருமத்தில் வெடிப்பு மற்றும் சரும எரிச்சலை ஏற்படும். இன்னும் சிலருக்கு மூக்கில் இரத்தப்போக்கு, மூக்கு வறண்டு போதல் மற்றும் தொண்டை வறட்சி போன்ற பிரச்சனைகள் காளானை அதிகமாக எடுத்துக் கொண்டால் ஏற்படும்.
- காளான் சாப்பிட்ட 20 முதல் 30 நிமிடங்களுக்கு சிலர் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். பின்னர் சிறிது நேரத்தில் உடல் முழுவதும் ஒருவித கூச்ச உணர்வை அனுபவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து மனச் சோர்வு ஏற்படும்.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமான பெண்கள் காளான்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றாலும், காளானை தவிர்ப்பதன் மூலம் பாதுகாப்பாக இருக்க முடியும்.
- சிலர் காளான்களை சாப்பிட்ட பின்னர் ஒரு நாள் முழுவதும் தலைவலியை அனுபவிக்கின்றனர்.
- காளான்கள் சாப்பிடுவது சில நபர்களுக்கு கவலையை ஏற்படுத்துகின்றன. இது லேசானது முதல் கடுமையாக வரை இருக்கும். காளான்களை அதிக அளவுகளில் எடுத்துக் கொள்ளும்போது இது போன்று ஏற்படும்.
- காளான்களை உட்கொண்ட பின் அளவுக்கு அதிகமான பயம், பீதி, பதட்டம் போன்ற மனநல கோளாறுகள் ஏற்படும்.
- காளான்களை அதிக அளவு உட்கொள்ளும்போது குழப்பம் ஏற்படும். அதோடு, குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காளான் சாப்பிடுவதால் மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US