CSK தக்க வைக்கும் 4 வீரர்கள் யார்? டோனிக்கு பதிலாக யார் கேப்டன்? சைமன் டவுல் கணிப்பு
சிஎஸ்கே தக்க கை்கும் 4 வீரர்களை நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணணையாளருமான சைமன் டவுல் கணித்துள்ளார்.
கான்பூரில் நடைபெற்று வரும் இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளையின் போது பேசிய சைமன் டவுல், சிஎஸ்கே அணி, தோனி, ஜடேஜா, கெய்க்வாட் மற்றும் டுபிளசிஸ் ஆகிய நான்கு பேரை தக்க வைக்கும்.
தோனி தனது கடைசி போட்டியை சென்னையில் விளையாடுவார், அதன் பிறகு டுபிளசிஸ் கேப்டனாக பதவியேற்பார்.
தோனி முழு சீசனும் விளையாடமாட்டார், அடுத்த சீசினில் ஒரு கட்டத்தில் டுபிளசிஸ் சிஎஸ்கே கேப்டனாக பொறுப்பேற்பார் என டவுல் கூறினார்.
ஆனால், டவுலுடன் முரண்பட்ட இர்பான் பதான், டுபிளசிஸ்-க்கு பதிலாக சென்னை அணி சாம் கரன் அல்லது மெயின் அலியை தக்க வைக்கும் என கூறினார்.