சொத்தைப்பல் வலியால் கடுமையாக அவதிப்படுகிறீர்களா..? கவலை விடுங்க.. இதனை போக்க இதோ சில எளிய வழிகள்
பொதுவாக பல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை . இது குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என எல்லோரையும் இது பாதிக்கிறது.
சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அதிகமாக பெருகி, பற்களைத் தாங்கும் எலும்புகளில் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், உயிருக்கே உலை வைக்கவும் செய்யும்.
,அவற்றிற்கு முக்கிய காரணமே இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதுதான். குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்வது தான்.
ஏனெனில் இவை வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன, இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.
எனவே சொத்தை பற்களை ஆரம்பத்திலே கவனிப்பது நல்லது.அதற்கு ஒரு சில இயற்கை வழிமுறைகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பூண்டு பல்லுடன் இரண்டு கல் உப்பு வைத்து பாதிக்கப்பட்ட பல் மேல் வைத்து வாயை மூடிவிடுங்கள். இதனால் பூண்டில் இருக்கும் ஆண்டி பாக்டீரியாக்கள் வலியைக் குறைத்து சற்று இலகுவாக இருக்கும்.
- வெதுவெதுப்பான சுடுநீர் கூட பல் வலிக்கு இதமாக இருக்கும். எனவே வெதுவெப்பான நீருடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வாயை நன்கு கொப்பளித்து துப்புங்கள். இதை வலி வரும்போது மட்டுமல்ல பொதுவாகவே உணவு சாப்பிட்டபின் செய்து வந்தால் உணவுத் துகள்கள் சிக்கி இருந்தாலும் வெளியேறும். சொத்தைப் பல் வருவதையும் தவிர்க்கலாம்.
- கற்பூரமும் சொத்தைப் பல் வலிக்கு நிவாரணி. எனவே அதை சிறு கட்டி எடுத்துக்கொண்டு வலியை உண்டாக்கும் பல்லின் மீது வைக்க வலி குறையும்.
- கிராம்பை வலி இருக்கும் பல்லின் மீது வைத்து வாயை மூடிவிட பல் ஈறுகள் ஜிவ்வென இழுக்கும். இதனால் வலி சற்று குறைந்து இலகுவாக இருக்கும். கிராம்பு எண்ணெய் இருந்தாலும் அதை பல் மீது தடவலாம்.
- மஞ்சள் ஆண்டி பாக்டீரியா மற்றும் ஆண்டி செப்டிக் பண்புகளை உள்ளடக்கியதால் அதை கொஞ்சமாக எடுத்து பல்லின் மீது தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரினால் வாயைக் கொப்பளித்து விடுங்கள். இதனால் ஈறுகளும் ஓய்வு பெறும்.