வெளிநாட்டில் தமிழர் செய்த நெகிழ்ச்சி உதவி! அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அந்நாட்டு அரசு
சிங்கப்பூரில் தமிழர் செய்த உதவிக்கு அவரை பாராட்டும் விதமாக அந்நாடு அரசு பாராட்டி பரிசு வழங்கியுள்ளது.
தமிழகத்தின் சிவகங்கை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் மணிகண்டன் (26). இவர் சிங்கப்பூரில் நில ஆய்வு உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த ஏப்ரல் 18-ஆம் திகதி சிங்கப்பூரின் அங் மோ கியோ அவென்யூ பகுதியில் பார்வையற்ற முதியவர் ஒருவர் சாலையை கடக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த குணசேகரன் மணிகண்டன், உடனடியாக அந்த முதியவரை கைப்பிடித்து அழைத்து சென்று பாதுகாப்பாக சாலையை கடக்க உதவினார். அதோடு மட்டுமில்லாமல் அவரது விருப்பப்படி மருத்துவமனையில் கொண்டுபோய் விட்டார்.
இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை சிங்கப்பூர் அரசின் மனித சக்தி துறையின் கீழ் இயங்கும் ஏஸ் அமைப்பின் அதிகாரிகள், சமூகவலைதள வீடியோவை ஆதாரமாகக் கொண்டு குணசேகரன் மணிகண்டனை கண்டுபிடித்தனர்.
சிங்கப்பூர் அரசு சார்பில் அவரை கவுரவித்து அன்பளிப்பையும் வழங்கினர். இது குறித்து குணசேகரன்மணிகண்டன் கூறுகையில், முடிந்தவரை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எனது பெற்றோர் எனக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
அந்த அறிவுரையை இப்போதும் கடைபிடித்து வருகிறேன். அரசு சார்பில் அளிக்கப்பட்ட அன்பளிப்புகளை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டேன். எனது வீடியோவை அம்மா, அப்பா, சகோதரர், உறவினர்கள் பார்த்து பாராட்டு தெரிவித்தாக கூறினார்.